Posted by Nada siva on Sunday, August 28, 2011
ஈழநாட்டின் யாழ் குடாவின் முக வாசலில் இருக்கும் தீவக தர்பத்தின்
தலைத்தீவாக விளங்கும் வேலணை கிராமம் நீர் நில எழில் பொழில் வளங்களோடு கல்வி
சமய சமுக வளர்ச்சியோடு சிறந்து விளங்கும் சிவத்தல பூமியாகும். தென்னங்
கீற்றோடு கூடிய பனங் கூடல்களும் திசையெட்டும் கொட்டிக்கிடக்கும்
திரவியங்களும் அங்கு வாழும் மக்களுக்கு செழுமையான முழுமையான வாழ்க்கைக்கு
வித்துகளாகும். அங்கு வாழும் மக்களின் வாழ்வுத் தரத்தை உயர்த்தவும் அந்த
மண்ணின் வளத்தைப் பெருக்கவும் புலம் பெயர் மக்களின் சேவை தேவையாகிறது .
இதற்கு உங்களின் கருத்தினையும் ஆலோசனைகளையும் சங்கம்
எதிர்பார்க்கிறது.அத்துடன் ஊரின் வரலாறுகள் நிகழ்வுகள் பற்றிய ஆக்கங்கள்
தங்கள் வசமிருந்தால் இந்த வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.ஆக்கங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி
velanaikkoddam @gmail.com